ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கீழக்கரை கடற்கரையில் இருந்து கஞ்சா கடத்த உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மூட்டை மூட்டையாக வைத்திருந்த 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்