கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் யானை தந்தங்களை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற 7 பேரை கைது செய்த வனத்துறையினர், 2 யானை தந்தங்களையும் பறிமுதல் செய்தனர். கைதானவர்களின் பின்புலம் என்ன?, தந்தங்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன?, யானைகளை கொன்றார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.