செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் ஹோட்டலில் சாப்பிட சென்ற தம்பதியை இளைஞர் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஐடி ஊழியரான அமுதன், தனது மனைவியுடன் ஹோட்டலுக்கு சென்ற போது, நுழைவுவாயில் ரேம்பில் முதியவர் மீது கார் உரசியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த முதியவரின் மகன் மகேந்திரன், ஹோட்டலில் இருந்த தம்பதியை சரமாரியாக தாக்கினார்.