விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சொத்துத் தகராறு காரணமாக தனியாக இருந்த தாய், மகனை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கும் சிசிவிடி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டிவனம் ஜெயபுரம் 2-ஆவது தெருவை சேர்ந்த செந்தில்குமார் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி ஆதிலட்சுமி, மகனுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீடு சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவரது உறவினர்கள் 2 பெண்கள் உட்பட 5 பேர் வீட்டின் காம்பவுண்டு சுவரை எறிக் குதித்து உள்ளே சென்று, ஆதிலட்சுமியையும், அவரது மகனையும் சரமாரியாக தாக்கினர்.