சென்னை பெரிய பாளையத்து அம்மன் கோயில் கும்பாபிஷேத்தை முன்னிட்டு மத நல்லிணக்க அடிப்படையில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் சீர் கொண்டு வந்தனர். கே.கே.நகர் விஜயராகபுரம் பகுதியில் அமைந்துள்ள பெரிய பாளையத்து அம்மன் கோயில் கும்பாபிஷேகம் மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக பூக்கள், பழங்கள், புடவை ஆகியவற்றை இஸ்லாமிய, கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் சீர் கொண்டு வந்தனர். அவர்களுக்கு பட்டாசு வெடித்தும், பூக்களை தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மதங்களை கடந்து மூன்று மதத்தினரும் சால்வை அணிவித்தும், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியும் அன்பை பரிமாறிக் கொண்டனர்.