தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, கொலை மிரட்டல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தலைமை காவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பாலக்கோடு காவல்நிலையத்தில் கணினிப் பிரிவில் பணியாற்றி வரும் சுரேஷ் என்பவர், சக்திகுமார் என்பவரிடம் கட்டாயப்படுத்தி லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.