கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தி துப்பாக்கி முனையில் விரட்டியடித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் சென்ற 2ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மீனவர்களும், இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலால் கரை திரும்பியுள்ளனர். இதனால், படகு ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாயிலிருந்து 50ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்த மீனவர்கள் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதையும் படியுங்கள் :ஆதி சிவன் சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி ஊர்வலம்