அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஞானசேகரன் திமுக ஆதரவாளர் என்பதால் மாநில காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என பாஜக வழக்கறிஞர் மோகன் தாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.