கோவை துடியலூர் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் சட்டவிரோதமாக வெளிநாட்டவர்கள் தங்கி இருப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் மற்றும் பங்களாதேசிகளை வெளியேற்றக்கோரி கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை கூறினார். சட்டவிரோத பாகிஸ்தானியர்கள் மற்றும் பங்களாதேஷிகள் குறித்த கணக்கெடுப்பில் திருப்தியில்லை எனவும் வெளியூர் தொழிலாளிகள் என்ற போர்வையில் பயங்கரவாதிகள் தங்கி இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.