நாமக்கல் மாவட்டம் வீசானத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் தங்களை இணைத்து கொள்ளுமாறு பட்டியலின மக்கள் கேட்டதால் திருவிழா தொடங்கிய ஒரே நாளில் நிறுத்தப்பட்டது. வீசானம் மகா மாரியம்மன் கோவில் திருவிழா திங்கட்கிழமை மாலை தொடங்கிய நிலையில், திருவிழா நடத்துவதற்கும், கருவறைக்குள் சென்று வழிபடுவதற்கும், பட்டியலின மக்கள் அனுமதி கோரினர். ஆனால், பட்டியலின மக்களுக்கு வழிபட மட்டும் தான் உரிமை இருப்பதாக மற்றொரு சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கோவில் முன்பு இருந்த கம்பத்தை பிடுங்கி கிணற்றில் வீசிவிட்டு திருவிழாவை நடத்தவில்லை என ஒரு தரப்பினர் கூறியதால் பதற்றம் நிலவியது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.