நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சாலையில் சென்ற பைக் மீது பின்னால் வந்த மற்றொரு பைக் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியானது. ஜீவா செட் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர், பள்ளிப்பாளையத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார். அப்போது தவறுதலாக சாலையின் நடுவே பைக்கை கொண்டு செல்ல முயன்றபோது, பின்னால் பெரியசாமி என்பவர் இயக்கி வந்த மற்றொரு பைக் மோதியது. இதில் நிலைக்குலைந்து கீழே விழுந்த பெரியசாமியை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.