கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அங்காளம்மன் கோயில் பெண் பூசாரியை 20 க்கும் மேற்பட்டோர் சேர்ந்து தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அம்மாவாசையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து அம்மனை வழிபட்ட நிலையில், திடீரென கோயிலுக்குள் புகுந்த 20 க்கும் மேற்பட்டோர் கோயிலின் பெண் பூசாரியை தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெண் பூசாரி முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்டாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.