திருப்பத்தூரில் இரண்டாவது நாளாக பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீரோடு கழிவு நீர் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை, நேதாஜி சாலை, முகமதுபுரா மஜித் தெரு, நீலிகொல்லை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரோடு கழிவு நீர் கலந்து சாலைகளில் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டது. கழிவு நீர் கலந்த மழைநீரில் நீந்தியபடி ஊர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.