கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையிலிருந்து பாசனத்திற்காக தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் துர்நாற்றத்துடன் நுரை பொங்கி செல்வதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தின் தென் பெண்ணை ஆற்றங்கரையோரங்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தேக்கி வைக்கப்பட்ட ரசாயன கழிவுநீர் ஆற்றில் வெளியேற்றி வருவதாகவும், இதனால் துர்நாற்றத்துடன் நுரை பொங்கி செல்வதாக கூறப்படுகிறது. குவியல் குவியலாக துர்நாற்றத்துடன் நுரை வெளியேறி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.