கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினரின் பேச்சுக்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூச்சல் குழப்பம் நிலவியது. மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பேசிய அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், பீளமேடு பகுதியில் உள்ள மயான இடத்தில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றார். அதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.