திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் சிறுமி முன்பு நிர்வாணமாக நின்ற இளைஞரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். நாட்றம்பள்ளியை சேர்ந்த 17 வயது சிறுமி, தனது வீட்டின் மாடியில் துணிகளை உலர வைக்க சென்றார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் 19 வயது இளைஞர் தமிழரசன் நிர்வாணமாக நின்றுள்ளார். இதனை தட்டிக்கேட்ட சிறுமியின் தந்தையை, தமிழரசனும் அவரது அண்ணனும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், தமிழரசன் மற்றும் அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.