தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருச்சாகுளம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் வேல்முருகன் என்பவர் நண்பர்களுடன் கிண்ற்றில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அப்போது, அவரை காப்பற்ற நண்பர்கள் முயன்ற நிலையிலும் பலனளிக்கவில்லை. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு படையினர் கயிறு கட்டி இரண்டு மணிநேரம் தேடி சடலத்தை மீட்டனர்.