கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை, பொதுமக்களை பார்த்து பிளிறியபடி ஓடியதன் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியானது. தமிழ்நாடு- கேரளா எல்லைப் பகுதியான ஆனைகட்டி பகுதியில் பகல் நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை, சாலையில் சென்றபோது பள்ளி வளாகத்தில் இருந்த பொதுமக்களை பார்த்து பிளிறிக் கொண்டு ஓடியது.