விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. கோட்டைமேடு பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் தனது இருசக்கர வாகனத்தை வலப்புறமாக திருப்ப முயன்ற போது, அவ்வழியே சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து வேகமாக மோதியது. இதில், கோபால் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.