Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னை போரூரில் இருந்து மென்பொருள் நிறுவனத்தின் பழைய பேட்டரிகள் மற்றும் மென்பொருள் உதிரிபாகங்களை மறு பயன்பாட்டிற்காக பூனேவுக்கு ஏற்றிச் சென்ற லாரி பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே செல்லும்போது லாரியில் இருந்த பேட்டரிகளில் திடீரென தீப்பற்றி உள்ளது. இதில் லாரி முழுவதும் தீ பரவியதில் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புவை எழந்துள்ளது.
இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்து வாகனங்கள் இயக்கப்பட்டன. பின்னர் தகவல் அறிந்து வந்த பள்ளிகொண்டா மற்றும் குடியாத்தம் தீயணைப்பு துறையை சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்துள்ளனர்.
தீவிபத்தில் சுமார் 20 லட்சம் மதிப்புகளான பொருட்கள் எரிந்து நாசமனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிகொண்டா காவல்துறையினர் லாரி ஓட்டுநர் தமிழரசனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved