கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பைக்கில் சென்ற பள்ளி மாணவன் மீது டெம்போ வேன் மோதி விபத்துக்குள்ளானதில், பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். ஒட்டர்பாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவன் சந்தோஷ், சூளகிரி பேருந்து நிலையம் செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொணடிருந்த போது, எதிரே வந்த டெம்போ வேன் அவன் மீது மோதியது. இதில், பள்ளி மாணவன் சாலையில் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிபட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்ததான்.