செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே சமூகநலக் காட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மோகன்வாடி கிராமத்தில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சமூக நலக்காட்டில், மயில், மான் உள்ளிட்ட பறவைகளும், விலங்குகளும் வசித்து வருகின்றன. இந்த சூழலில், காட்டில் திடீரென தீப்பற்றிய நிலையில், தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.