திருச்சி மாவட்டம் முசிறியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கைகாட்டியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் உணவு விடுதி முன்பாக முசிறி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஸ்டீபன் என்பவர் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு உணவு வாங்க சென்றுள்ளார். திடீரென அந்த ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிய தொடங்கி டேங்கில் இருந்த பெட்ரோலும் தீ பிடித்ததால் ஸ்கூட்டர் கொழுந்து விட்டு எரிந்தது.