காரைக்கால் அருகே கட்ட தொழிலாளி வீட்டில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோவில்பத்து பகுதியை சேர்ந்த கட்ட தொழிலாளி மணிகண்டன் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றார். இதனால் வீட்டின் முன்பகுதி சேதமடைந்ததாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக அளித்த புகாரை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.