கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் கட்டுமான தொழிலாளி கொல்லப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். ராஜா என்பவரின் செல்போனை அடமானம் வைத்து இளங்கோவன் என்பவர் பணம் பெற்ற நிலையில், பணத்தை திருப்பி தராமல் செல்போனை கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராஜா, இளங்கோவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.