வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து வரும் 9ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதற்கடுத்த 3 முதல் 4 நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு வங்கம் - வடக்கு ஓடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.