மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் தொடங்கிய வசந்த உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அழகரை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, சுவாமி ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி ஆடி வீதி, ராமர் சந்நிதி வழியாக வசந்த மண்டபத்தை அடைந்தார். விழாவில், அழகருக்கு சாற்றப்பட்ட மாலை பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு சாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.