தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பரமசிவன் மலைக்கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக, மலைக்கோவிலில் இருந்து அரண்மனை ஓவியர்களால் வரையப்பட்ட பரமசிவன் திருவுருவப்படம் மற்றும் உற்சவர் சிலைகள் அரண்மனை வளாகத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நிகழ்வு நடைபெற்றது. ஆண்டிற்கு ஒருமுறை அரண்மனைக்கு ஊர்வலமாக வந்து அருள்பாலிக்கும் சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.