கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த சின்னார் பதி பகுதியில், சுற்றித்திரிந்த சில்லி கொம்பன் யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் இருந்து வெளியே வந்த யானை, வால்பாறை சாலையில் சுற்றித்திரிந்தது. மேலும் சின்னார்பதி குடியிருப்புக்குள்ளும் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.