தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே காட்டுப்பகுதியில் கூலித்தொழிலாளி படுகொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கதிர் நரசிங்கபுரத்தை சேர்ந்த கூலிதொழிலாளியான முருகன் என்பவர், அங்குள்ள காட்டுப்பகுதியில் இரவு நேரத்தில் இருந்தபோது அங்கு வந்த கும்பல் ஒன்று, அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இவரது உடல் அருகே பைக் ஒன்றும் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் பைக் உரிமையாளரிடம் விசாரித்தபோது, தன்னை சிலர் தாக்கிவிட்டு பைக்கை பறித்துச் சென்றதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.