திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஹார்டுவேர்ஸ் கடையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். காமநாயக்கன்பாளையம் பகுதியில் ராஜா என்பவர் நடத்தி வரும் துர்கா ஹார்டுவேர்ஸ் கடையில், திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த சூலூர் மற்றும் பல்லடம் தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.