கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. ஒசூர் பெரியார் நகரில் ராஜேஷ் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டைல் ஐகான் என்னும் துணிக்கடையை நடத்தி வந்த நிலையில் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி கரும்புகையுடன் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு மற்ற கடைகளுக்கும் தீ பரவாத வகையில் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கடையிலிருந்த துணிகள் எரிந்து சேதமானது.