நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலை போராட்டத்தின் போது, முன்னாள் போலீஸ் டிஜிபி ராஜேஷ்தாசின் பாதுகாவலரின் துப்பாக்கியை பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத் தலைவர் உதயகுமார் உள்பட 5 பேர், ராதாபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 16-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும், மக்களையும் சந்தித்து மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக கூறினார்.