கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எறையூரை சேர்ந்து பவுல் பீட்டர் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.