ராணிப்பேட்டை அருகே பெரும்புலிப்பாக்கத்தில், முன்னால் சென்ற லாரியை முந்த முயற்சித்த கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சிறுமி உள்பட ஒன்பது பேர் பலத்த காயமடைந்தனர். ஓசூரை சேர்ந்த மோகன் உள்ளிட்ட ஒன்பது பேர், காஞ்சிபுரத்தில் நடந்த உறவினரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பும்போது விபத்தில் சிக்கினர். விபத்து குறித்து அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.