கிருஷ்ணகிரி மாவட்டம் சோனாரஅள்ளி பகுதியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்தான். அந்தேரிப்பட்டி பகுதியை சேர்ந்த அண்ணாமலை - ராஜாமணி தம்பதியினர், உடல்நிலை சரியில்லாத தனது பேரன் ரிஷிகேஷை மருத்துவமனைக்கு பைக்கில் அழைத்துச் சென்றனர். அப்போது, சோனாரஅள்ளி பகுதியில் பின்னால் வந்த கார் மோதி விபத்தில் சிக்கினர். இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், சிறுவன் ரிஷிகேஷ் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.