திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கூலி தொழிலாளிகள் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சக்கரமாநல்லூர் பகுதியில் கரும்பு வெட்ட வந்த இவர்கள் மீது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ஷாம்குமார் என்பவர், அவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் ஷாம்குமார் மற்றும் கடலூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்ற கூலித் தொழிலாளி ஆகியோர் உயிரிழந்தனர்.