சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே சாலையில் மிரண்டு ஓடிய மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடைய மனைவி சிங்காரி மகன் சிவராமனுடன் கடைக்கு சென்று திரும்பிய போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.