திருச்சி மாவட்டம் முசிறி அருகே கத்திக்குத்து சம்பவத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 25ம் தேதி கல்லுப்பட்டி கிராமத்துக்குள் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் மது போதையில் தகராறு செய்து, அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், குமார், சந்துரு ஆகிய மூன்று பேரை கத்தியால் குத்தியது. இதில் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார் இச்சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் முக்கிய குற்றவாளிகளான 6 பேரை கைது செய்து, மற்றொருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.