கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மினிபேருந்து மீது பிக்கப்வேன் அதிவேகமாக உரசி செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது.காவேரிப்பட்டினத்தில் இருந்து 25 பேர் குடும்பத்துடன் மினிபேருந்தில் சென்று கொண்டிருந்த போது, சோனார அள்ளி அருகே எதிரே வந்த பிக்கப் வேன் ஒன்று மினி பேருந்தின் பக்கவாட்டில் உரசி விபத்து ஏற்பட்டது. இதில், பேருந்தில் பயணம் செய்த சிறுமி காயமடைந்து உயிரிழந்தார்.