தமிழகத்தை சேர்ந்த 6 வயது சிறுமி நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம்ப்பை அடைந்து சாதனை படைத்துள்ளார். சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் திருநெல்வேலி ராமையன்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர், தனது மகள் லலித் ரேணுவுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கடந்த 14-ஆம் தேதி 18 ஆயிரம் அடி உயரமுள்ள பேஸ் கேம்பை அடைந்தனர்.