மயிலாடுதுறை அருகே பாடகச்சேரி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பாய் நாற்றங்காலை காட்டுப்பன்றி உள்ளே புகுந்து சேதப்படுததி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். காட்டுப்பன்றி பயிர்களை தாக்கி வரும் நிலையில், அங்குள்ள மின் மோட்டார்களில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காப்பர் ஒயரை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.