தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தில் 99 சதவீதம் பேர் பட்டியலின சாதியில் இருந்து வெளியேறுவதை ஆதரிப்பதாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார். சென்னையில் ஆளுநர் ஆர். என்.ரவியை சந்தித்த அவர், தென் மாவட்டங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பே கொலைகளுக்கு காரணம் என கூறினார்.