நெல்லையில் 9 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் இருக்கும் பகுதிகளில் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், கிருமி நாசினி தெளித்தல், முதியோருக்கு பரிசோதனை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.