தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் 63 நாயன்மார்களுக்கு கைலாய காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. கோமதி அம்மன் மற்றும் சங்கரலிங்க சுவாமி, வேத மந்திரங்கள் முழங்க பஞ்ச வாத்தியங்களுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.