சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே குவாரி விபத்து தொடர்பாக கனிம வளத்துறை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கமும், வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்தும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்தில் பாறை சரிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்த நிலையில், விசாரணையில் உரிமம் காலாவதியான பிறகும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.