திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை திருடியதாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர். தாமரைப்பாக்கம் டாஸ்மாக் கடையில் நவம்பர் 30-ம் தேதி இரவு ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பு மது பாட்டில்களையும், மெய்யூர் டாஸ்மாக் கடையில் டிசம்பர் 11-ம் இரவு நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களையும் திருடிச் சென்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.