நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பழமையான பாலத்தில் மது அருந்திய படி தூண்டில் போட்ட 5 பேரை, போலீசார் 100 தோப்புக்கரணம் போட வைத்து எச்சரித்து அனுப்பினர். பவானி - குமாரபாளையத்தை இணைக்கும் ஆங்கிலேயர் கால பாலத்தின் நுனியில் அமர்ந்து கொண்டு, அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆபத்தான வகையில் மது அருந்தியபடி தூண்டில் போட்டு மீன் பிடித்தனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ பதிவு செய்து போலீசாரிடம் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் மது பாட்டில் மற்றும் மீன் தூண்டில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.