நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் யூகோ வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்த அயூப், முகமது ஹபீஸ் ஆகியோர் யூகோ வங்கி கிளையில் 261 கிராம் தங்க நகை என கூறி அடமானம் வைத்து 8 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கினர்.நகை மதிப்பீட்டாளர்கள் சந்திரசேகரன், வினோத் ஆகியோர் அசல் நகைகள் என்பதற்கான சான்றிதழை வழங்கினர்.ஆனால் வருடாந்திர ஆய்வு பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள், 4 பேரும் போலி நகைகளை அடகு வைத்ததும், அவர்களுக்கும் உடந்தையாக நகை மதிப்பீட்டாளர்கள் இருந்ததும் கண்டுபிடித்தனர்.இந்நிலையில் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.