அமெரிக்க வாழ் இந்தியரிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்த தென்காசியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் வசித்து வரும் ராமச்சந்திரன் சுவாமி என்பவருக்கும் தென்காசியைச் ராயல் நாயுடு என்பவருக்கும் நட்பு இருந்தததாக கூறப்படுகிறது. ராமசந்திர சுவாமியிடம் ஆசை வார்த்தை காட்டி பல்வேறு தவணைகளில் 3 கோடி ரூபாய் வரை பெற்று ராயல் நாயுடு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கேட்ட போது தர மறுத்ததோடு ராமசந்திர சுவாமிக்கு ராயல் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது